search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வானிலை ஆய்மை மையம்"

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுவையிலும் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.


    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சி, நீலகிரி ஜி.பஜாரில் 5 செ.மீ மழையும், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில், 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×